Puthina benefits in tamil
புதினா நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்த ஒரு மருத்துவச் சார்ந்த இலையாகும். இன்று நாம் புதினாவை மருத்துவம் ரீதியாக பயன்படுத்துவதை விட, சமையலில் உணவின் சுவையை, அதிகப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறோம். அனைத்து பருவ காலங்களிலும் வீட்டிலேயே எளிய முறையில் வளர்க்கக்கூடிய ஒரு செடி புதினா. புதினாவின் உள்ள ஊட்டச்சத்துக்களையும், நன்மைகளையும் நாம் விரிவாக காணலாம்.
புதினாவில் வைட்டமின் டி,மற்றும் வைட்டமின் இ,போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் தலைவலி, வயிற்று கோளாறு, வாய் துர்நாற்றம் போன்ற பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
பைல்ஸ் உள்ளவர்கள் புதினாவை தவிர்க்கலாம்.காரணம். புதினா உடல் சூட்டை அதிகப்படுத்தும். சளி மற்றும் இருமல் உள்ளவர்கள், அவர்களது உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம்,அல்லது புதினாவை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுவதாலும், சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
தொண்டை புண் உள்ளவர்கள் இந்த புதினாவை அரைத்து தடவுவதன் மூலமாக தொண்டைப்புண் விரைவில் குணமடையும். உள்நாக்கு வளர்ச்சி, மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள், புதினாவை தினந்தோறும் எடுத்துக்கொண்டு வந்தால், இவ்வித பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
உடல் உபாதைகளில் இருந்து புதினா மூலம் தீர்வு:

- கர்ப்பிணி பெண்கள் புதினாவை அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால் அவர்களுக்கு வைட்டமின் சி,மற்றும் வைட்டமின் டி சத்து அதிகமாக கிடைக்கும்.
- வயிற்று பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு, வாயு கோளாறு மற்றும் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
- நாம் வெறும் தண்ணீரில் புதினாவை போட்டு ,அதனை அடிக்கடி எடுத்துக் கொண்டால் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த புதினா நீர் .
- உடலில் ஏற்படும் வெப்பத்தினால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும். அந்த நேரங்களில் இந்த புதினா தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வதால், சிறுநீரகப் பிரச்சனை என்பதை இருக்காது.
- மூச்சுத் திறன் திணறல் உள்ளவர்கள் புதினா தண்ணீரை அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால் மூச்சுத் திணறல் குணமடையும்.
- மூச்சுத் திணறல் உள்ளவர்களின் உடம்பில் ஆக்சிஜன் அளவானது குறைவாக இருக்கும்.அதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது . இது மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க, நாம் புதினா தண்ணீரை அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால், இம்மாதிரியான பிரச்சனையானது குறையும்.
- குழந்தைகள் மற்றும் வெயிலில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு இந்த புதினா தண்ணீருடன், எலுமிச்சைச்சாறு சேர்த்து அவர்களுக்கு கொடுத்தால் அவரது உடம்பில் ஆற்றலை அதிகரிக்கும், மற்றும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
புதினவின் பயன்பாடுகள்

தலைவலி இருக்கும் பொழுது புதினா சேர்ந்த தேநீர் அல்லது புதினாவை வெந்நீரில் கொதிக்க வைத்து குடித்தால் தலைவலி ஆனது விரைவில் குறையும்.
- புதினாவை எப்படி சாப்பிட்டாலும் அதில் உள்ள நன்மைகள் கிடைக்கும்.
- புதினவை பழ சாறுடன் கலந்து பலர் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போதும் புதினாவின் நன்மையானது நமக்கு முழுமையாக கிடைக்கும்.
- தொண்டையில் பிரச்சனைகளான தொண்டைப்புண், தொண்டை வலி போன்ற நோய்களுக்கு புதினா ஒரு நல்ல உணவாகும். புதினாவில் சிறிது இஞ்சி, பூண்டு சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து கொண்டு சமைக்கும் பொழுது, இந்த பிரச்சனையானது விரைவில் சரியாகும்.

புதினா இல்லாமல் பிரியாணி இல்லை என்பது தற்போதைய நிலை. ஏனென்றால் புதினாவின் சுவையும், சத்துக்களும் அதிகமாக உள்ளது. பிரியாணியை எளிதில் செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது.
- மாதவிடாய் காலங்களில் புதினாவை எடுத்துக்கொண்டு வந்தால், வயிற்றுப் பிடிப்பானது குறையும்.ரத்தப்போக்கினால் ஏற்படும் துர்நாற்றத்தையும் குறைக்கும்.
- புதினாவை சட்னியாக செய்தும், சாப்பிடலாம் அதை சாதத்துடனும், தோசை, இட்லி போன்ற உணவுகளின் மூலமாகவும் அதனை எடுத்துக் கொள்ளலாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு புதினாவை எவ்வாறு மாற்றினாலும், அதனுடைய சுவையானது குறையாது. புதினாவின் முழு நன்மையும் பெறுவார்கள்.
புதினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் :
- வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ, வைட்டமின் டி போன்ற சத்துக்கள் அதிகமாக உடலின் உள்ளதால் செல்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
- வயிற்றில் உள்ள அதிகப்படியான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக விளங்கும் இந்த புதினா. எல்லா பருவ சூழ்நிலைகளிலும் கிடைக்கும்.
- முகப்பருக்கள்,முகப்பருவினால் ஏற்பட்ட வடுக்கள் போன்றவற்றை குணப்படுத்தும்.
- துர்நாற்றத்தை குறைப்பதற்கு இந்த புதினாவானது மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பற்கள் மற்றும் நாக்கின் உள்ள கிருமிகள் மூலம்,வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் உண்டு.
- வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் இரண்டு, மூன்று புதினா இலையை மென்னு சாப்பிட்டால் அந்த துர்நாற்றமானது இருக்காது.
- புதினாவினால் ஏற்படும் நறுமணம் மன அழுத்தத்தை குறைக்கும் . மன அழுத்தம் குறைந்தால் உடலில் உள்ள ரத்த ஓட்டங்கள் சரியான அளவிலும், சரியான முறையில் எல்லா பகுதிகளுக்கும் செல்லும். இதனால் மூளை சம்பந்தப்பட்ட நோய்களும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் வராது.
- புதினா இலையானது பச்சை நிறத்தில் காணப்படுவதால் இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக இருக்கும். அதனால் புதினாவை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆக்ஸிஜன் குறைபாடும் இருக்காது .
- ஒவமை பிரச்சனை உள்ளவர்கள் புதினா இலையை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த இலையை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை பிரச்சனை விரைவில் குணமடையும்.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் புதினா டீ மற்றும் புதினா தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் எடையானது விரைவில் குறைவும்.
- ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் புதினாவை எடுத்துக் கொண்டால், ஹீமோகுளோபின் அளவு புதினா அதிகப்படுத்தும்.
- பொட்டாசியம் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் பல் சார்ந்த பிரச்சனையும் எலும்பு சார்ந்த பிரச்சனையும் இருக்காது.