Arai keerai benefits in tamil
அரைக்கீரை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நமது உடலுக்கு கிடைக்கும்.அரை கீரையில் கால்சியம்,நார்ச்சத்து ,வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளதால், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ரத்த சோகை உள்ளவர்கள் போன்ற அனைவரும் இதனை எடுத்துக் கொள்வது நல்லது. செரிமான கோளாறு உள்ளவர்கள் ,இதய நோய் உள்ளவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
அரைக்கீரையின் பயன்பாடு மற்றும் நன்மைகள்

அரைக்கீரையின் மூலம் காய்ச்சல், சளி ,இருமலை குறைக்கலாம்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி ,இருமல் ,காய்ச்சல் என்பது அனைவருக்கும் அடிக்கடி வரக்கூடியது .இதற்கு காரணம் அவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பது .அரைக்கீரையில் அவர்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்போது இப்பிரச்சனையானது விரைவில் குணப்படுத்தலாம். காய்ச்சல் ,சளி, இருமல் வருவதை தடுக்கலாம்.
அரைக்கீரையில் வைட்டமின் சி சத்தை அதிகரிக்கலாம்:
வைட்டமின் சி சத்து உடம்பிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். வைட்டமின் சி குறைவதால் சருமம் வறண்டு போதல், காயங்கள் ஆறாமல் இருப்பது,ஈறுகளில் ரத்தம் வடிதல், பற்களுக்கு வலிமை இல்லாமல் இருப்பது, கீழ்வாதம் மனசோர்வு, இதய ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது,ஆக்சிஜன் குறைவாக இருப்பது, போன்ற பலவித பிரச்சனைகள் உருவாகும்.
இந்த வைட்டமின் சி -யை அதிகரிப்பதற்கு நமது உணவில் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை மற்றும் கீரை வகைகளான அரைக்கீரை எடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் வைட்டமின் சி சத்தை அதிகரிக்கலாம்.
அரைக்கீரை இரும்புச்சத்தை அதிகரிக்கும்:
இரும்புச்சத்து குறைவதால் உடல் சோர்வு, பலவீனமாக உணர்வது, மூச்சுத் திணறல், போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வரும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அரைக்கீரையை எடுத்து கொள்ளலாம், இதில் அயரின் ரிச் சத்து அதிகமாக உள்ளது. .இதன் மூலம் இரும்பு சத்தினை அதிகரிக்கலாம்.
அரைக்கீரை மூலம் நார்ச்சத்தை அதிகப்படுத்தலாம்:
நார்ச்சத்து சரியான அளவு உடம்பில் இல்லை என்றால் ஜீரணக் கோளாறு,மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,உடல் எடை அதிகமாக இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது போன்ற பலவித பிரச்சனைகளை உடம்பில் ஏற்படுத்தும்.
நார்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கு ,உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அரைக்கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது உள்ளாது.
அரைக்கீரையின் மூலம் கால்சியம் சத்தை அதிகரிக்கலாம்:
கால்சியம் குறைபாடு இருந்தால் சோர்வு, முடி வளர்ச்சி குறைவாக இருப்பது,எலும்பு முறிவு தசை பிடிப்பு, எலும்புகளில் வலு இல்லாமல் இருப்பது, போன்ற பல பிரச்சனைகள் நமக்கு உருவாகும்.
கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், இப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் மூலமாக கால்சியம் சத்து குறைவதை தவிர்க்கலாம். வாரம் ஒரு முறை அரைக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் சத்தை அதிகரிக்கலாம்.
அரைக்கீரையின் மூலம் கண் பார்வையை மேம்படுத்துதல்:

கண் ரீதியான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் வைட்டமின் ஏ குறைபாடு. பலருக்கு கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் புறை விழுதல், தெளிவேற்ற பார்வை, போன்ற பலவிதமான கண் சார்ந்த பிரச்சினைகள் வருகின்றன
இப்பிரச்சனைகளுக்கு தீர்வு வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளதது ஆகும் . அந்த வகையில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3.அரைக்கீரையில் அதிகமாக உள்ளதால் வாரம் இரண்டு முறை இதனை எடுத்து கொள்ளும்போது கண் பார்வையானது மேம்படும்.

அரைக்கீரை அதிகமாக எடுப்பதால் உடம்பில் சேரும் நச்சுக்களை வெளியேற்றலாம் சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்குவதற்கும் மற்றும் கல் உருவாகாமல் இருப்பதற்கும் இந்த கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
அரைக்கீரையின் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம்:
புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதற்கு அரைக்கீரை ஆனது மிகவும் அதிகமாக பயன்படுகிறது , மாதம் இரண்டு மூன்று முறைஅரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் உள்ளவர்கள் அனைவரும் அறிய வேண்டும்.