Homeமருத்துவம்உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா?  நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் இதுதான்!

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா?  நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் இதுதான்!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக ஆகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சர்க்கரை  நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காணும் உணவு எல்லாம் சட்டென எடுத்து சுருக்க முடியாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சர்க்கரை நோயின் அளவை சீராக வைத்திருக்கும் வரை அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பல இடங்களில் சில ருசியான நினைப்பு பண்டங்களை பார்க்கும் பொழுது அவற்றை தவிர்க்க மனமில்லாமல் எடுத்து சாப்பிட்டு விடுவார்கள். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இருப்பவர்களுக்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது ஆனால் குறிப்பிட்ட அளவை தாண்டும் பொழுது அவர்கள் பல துன்பங்களுக்கு மற்றும் பல நோய்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள். கண்பார்வை இழப்பு, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு கால்களில் ஏதேனும் சிறு புண்கள் வந்தால் அதை ஆறாமல் பெரிய அளவில் தொல்லை கொடுத்து விடும், மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் என பல நோய்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.அதனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை : 

venthyam

வெந்தயம்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஊறவைத்த அந்த வெந்தயத்துடன் அதில் சேர்த்த தண்ணீரையும் சேர்த்து சாப்பிட வேண்டும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை இதுபோல வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்  ரத்தத்தில் அதிக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

அதேபோல வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடிகட்டி   ஊறியவெந்தயத்தை  ஒரு நல்ல துணியை கட்டி ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு அவற்றை எடுத்துப் பார்த்தால் நன்றாக முளைகட்டி இருக்கும். சொல்லப்போனால் சாதாரணமாக ஊறவைத்து சாப்பிடும் வெந்தயத்தை விட இது போன்று முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் அதன் பயன் என்பது  அதிகமாக இருக்கும். அதாவது ஊற வைத்த வெந்தயத்தை விட  இதுபோன்று முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் வெகு விரைவில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அது மட்டும் இன்றி வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ, சர்க்கரை நோயாளி ஏற்படும் கண் பார்வை இழப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. 

fibre rich vegetables

 நார்சத்து  உள்ள காய்கறிகள்

 நார்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும்  நார்சத்து அதிகம் கொண்ட  காய்கறிகள் இரைப்பை மற்றும் சிறுகுடலில் சேரும் கார்போஹைட்ரேட்சை, குளுக்கோஸ் ஆக மாற்றப்படுவதன் வேகம் குறைக்கப்படுகிறது.

இதனால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்வது தடுக்கப்படுவதால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது.

அதனால்  நார்ச்சத்து அதிகம் உள்ள கீரைகள் மற்றும் நார் சத்து அதிகம் உள்ள காய்கறிகளான பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக்காய், வாழைப்பூ, முட்டைகோஸ், காலிபிளவர், பிரக்கோலி,சௌசௌ மற்றும் சுரைக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

pagarkai

பாகற்காய்

அதிக கசப்பு தன்மையை கொண்ட பாகற்காயை பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவிர்ப்பார்கள். ஆனால் அவற்றின் பயன் தெரிந்தவர்கள் தவிர்க்க மாட்டார்கள். பாகற்காயில் கீரையை விட அதிகமான இரும்பு சத்தும் கால்சியமும் மற்றும் போதுமான அளவு பீட்டா கேரோட்டினும் உள்ளது.

பாகற்காய் இன்சுலின்  சுரப்பை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாடுடன் இருக்கும்.

nellikai

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஒரு சிறந்த உணவாக சொல்லப்படுகிறது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாறில்  ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

நெல்லிக்காயில் தேன் கலந்து சாப்பிடுவதனால் ரத்தம் சுத்தமாகும். மற்றும் உடல் சுறுசுறுப்புடன் இயங்கும்.

navalpalam

நாவல் பழம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சில பழங்களை சாப்பிடவும் பயப்படுவார்கள். ஆனால் அவர்களும் பயமில்லாமல் சாப்பிட ஒரு சிறந்த பழம்தான் நாவல் பழம். நாவல் பழத்திலுள்ள படம் மட்டும் இன்றி அதில் உள்ள விதியும் ஒரு சிறந்த மருந்தாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அமைகிறது. 

நாவல் பழத்தின் விதையை காய வைத்து பொடியாக்கி அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் சீராக இருக்கும். இது கணையத்தை பலப்படுத்தி அவற்றின் சுரப்பை சீரான நிலையில் வைக்கிறது. 

அது மட்டும் இன்றி நாவல் பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து,கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் என பல தாதுக்கள் நிறைந்துள்ளதால் நாவல் பழம் உடலுக்கு அவ்வளவு நல்லது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments